இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
2005ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி. லிங்குசாமிக்கு இந்த படம் தான் விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகப்படுத்தியது. மீரா ஜாஸ்மின் ஹீரோயின் ஆக நடித்திருந்தார் ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் விஜய் நடிக்க விரும்பியதாகவும் அதனை அவர் மறுத்துவிட்டார் என்றும் தற்போது லிங்குசாமி கூறியிருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :
சண்டக்கோழி கதை தயாரானதும் விஜயிடம் சென்று கதை சொன்னேன் பாதி கதை கேட்டவர் மீதி கவிதை கேட்க மறுத்தார். காரணம் மீதி கதையில்தான் ராஜ்கிரன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ராஜ்கிரண் படத்துக்குள் வந்த பிறகு எனக்கு என்ன வேலை இருக்கிறது என்று விஜய் கூறிவிட்டார். அடுத்து சூர்யாவிடம் கதை சொன்னேன் அவரும் நடிக்க மறுத்து விட்டார். அதன் பிறகு தான் விஷாலை நடிக்க வைத்தேன்.
சண்டக்கோழி படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரு முறை விஜய் சந்தித்தேன். அப்போது அவரிடம் படத்தின் இரண்டாம் பகுதி கதையின் கேட்கவே இல்லையே என்றேன். "அந்தப் பையன்(விஷால்) இந்த துறைக்கு வர வேண்டும் என்று இருக்கிறது. அவருக்கு பொருத்தமான கதை இது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் பிரமாதமாக நடித்திருக்கிறார் என்று சொன்னார். விஷால் பிரபாஸ் இடத்திற்கு வந்திருக்க வேண்டியது. எங்கோ மிஸ் ஆகி இருக்கிறது ஆனாலும் விரைவில் அவர் அந்த இடத்திற்கு வருவார்.
இவ்வாறு லிங்குசாமி கூறியிருக்கிறார்.