ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
2005ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி. லிங்குசாமிக்கு இந்த படம் தான் விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகப்படுத்தியது. மீரா ஜாஸ்மின் ஹீரோயின் ஆக நடித்திருந்தார் ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் விஜய் நடிக்க விரும்பியதாகவும் அதனை அவர் மறுத்துவிட்டார் என்றும் தற்போது லிங்குசாமி கூறியிருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :
சண்டக்கோழி கதை தயாரானதும் விஜயிடம் சென்று கதை சொன்னேன் பாதி கதை கேட்டவர் மீதி கவிதை கேட்க மறுத்தார். காரணம் மீதி கதையில்தான் ராஜ்கிரன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ராஜ்கிரண் படத்துக்குள் வந்த பிறகு எனக்கு என்ன வேலை இருக்கிறது என்று விஜய் கூறிவிட்டார். அடுத்து சூர்யாவிடம் கதை சொன்னேன் அவரும் நடிக்க மறுத்து விட்டார். அதன் பிறகு தான் விஷாலை நடிக்க வைத்தேன்.
சண்டக்கோழி படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரு முறை விஜய் சந்தித்தேன். அப்போது அவரிடம் படத்தின் இரண்டாம் பகுதி கதையின் கேட்கவே இல்லையே என்றேன். "அந்தப் பையன்(விஷால்) இந்த துறைக்கு வர வேண்டும் என்று இருக்கிறது. அவருக்கு பொருத்தமான கதை இது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் பிரமாதமாக நடித்திருக்கிறார் என்று சொன்னார். விஷால் பிரபாஸ் இடத்திற்கு வந்திருக்க வேண்டியது. எங்கோ மிஸ் ஆகி இருக்கிறது ஆனாலும் விரைவில் அவர் அந்த இடத்திற்கு வருவார்.
இவ்வாறு லிங்குசாமி கூறியிருக்கிறார்.