யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
2025ம் ஆண்டு இப்போதுதான் ஆரம்பமானது போல உள்ளது. ஆனால், அதற்குள்ளாக இரண்டு மாதங்கள் முடியப் போகிறது. பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 28ம் தேதி இரண்டு த்ரில்லர் படங்கள் போட்டியில் மோத உள்ளன.
பாடலாசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜுன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள 'அகத்தியா' படமும், அறிவழகன் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா மற்றும் பலர் நடித்துள்ள 'சப்தம்' படமும் வெளியாக உள்ளன. இரண்டு படங்களுமே த்ரில்லர் படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இரண்டு படங்களிலும் ஒரு மர்ம மாளிகை முக்கிய களமாக இருக்கிறது என்பது டிரைலரைப் பார்க்கும் போதே தெரிகிறது. யார் எந்த அளவுக்கு பயமுறுத்தப் போகிறார்களோ அந்த அளவிற்கு வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.
இந்தப் படங்கள் தவிர்த்து 'கூரன், கடைசி தோட்டா' ஆகிய படங்களும் அன்றைய தினம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.