அல்லு அர்ஜுனின் அடுத்த படம் சரித்திரப் படம்? | அம்மா ஆகப் போகும் கியாரா அத்வானி : வாழ்த்திய சமந்தா, ராஷ்மிகா | நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது : அமிதாப்பச்சனின் பதிவால் பரபரப்பு! | கிரிப்டோ கரன்சி முறைகேடு குற்றச்சாட்டு : தமன்னா விளக்கம் | இர்பான் கான் நினைவாக தங்கள் கிராமத்திற்கு புதிய பெயர் சூட்டிய மக்கள் | கருப்பை வெள்ளையாக்க அதிக படங்களில் நடிக்கிறேனா? : டென்ஷனான வாரிசு நடிகர் | ராஜ்குமாரின் 50வது பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் ஆகும் அப்பு | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த மோகன்லால், சீனிவாசன் கூட்டணி | தகராறை முடித்துக் கொண்ட கங்கனா ரணவத், ஜாவேத் அக்தர் | கெட்டிமேளம் தொடரில் என்ட்ரி கொடுக்கும் கன்னட நடிகை |
ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017ல் வெளியான படம் 'மரகத நாணயம்'. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரித்திருந்தது. இதன் 2வது பாகம் தயாராக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அதன்பின் எந்தவித அப்டேட்டும் வெளிவரவில்லை.
இதற்கிடையே ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்கியுள்ள 'சப்தம்' படம் பிப்.,28ல் ரிலீசாகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ஆதியிடம் 'மரகத நாணயம் 2' குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''மரகத நாணயம் 2 விரைவில் துவங்க உள்ளோம். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. முதல் பாகத்தில் பணியாற்றியவர்களும் சேர்ந்து பெரிய குழுவினர் இணைந்திருக்கிறார்கள். முதல் பாகத்தின் கதை சிறியதாக இருந்தது, 2ம் பாகத்தின் கதை பெரியதாக இருக்கும். கண்டிப்பாக நல்ல படமாக வரும் என நம்புகிறோம்'' என பதிலளித்தார் ஆதி.