பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017ல் வெளியான படம் 'மரகத நாணயம்'. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரித்திருந்தது. இதன் 2வது பாகம் தயாராக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அதன்பின் எந்தவித அப்டேட்டும் வெளிவரவில்லை.
இதற்கிடையே ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்கியுள்ள 'சப்தம்' படம் பிப்.,28ல் ரிலீசாகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ஆதியிடம் 'மரகத நாணயம் 2' குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''மரகத நாணயம் 2 விரைவில் துவங்க உள்ளோம். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. முதல் பாகத்தில் பணியாற்றியவர்களும் சேர்ந்து பெரிய குழுவினர் இணைந்திருக்கிறார்கள். முதல் பாகத்தின் கதை சிறியதாக இருந்தது, 2ம் பாகத்தின் கதை பெரியதாக இருக்கும். கண்டிப்பாக நல்ல படமாக வரும் என நம்புகிறோம்'' என பதிலளித்தார் ஆதி.