துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு |
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான படம் கனா. கிராமத்தில் இருக்கும் பெண் ஒருவர் எப்படி இந்திய அளவில் கிரிக்கெட் வீராங்கனை ஆக உயர்கிறார் என்கிற கதையைம்சத்துடன் வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு கிரிக்கெட் கோச் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான சஜீவன் சஜனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கேரளாவை சேர்ந்த இவர், நடிகர் சிவகார்த்திகேயன் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது தனக்கு உதவிய நிகழ்வு ஒன்றை தற்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு முறை மழை வெள்ளத்தால் நாங்கள் மிகப்பெரிய அளவில் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்ட போது சிவகார்த்திகேயன் என்னை தொடர்பு கொண்டு பேசியதுடன் உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு நான், அண்ணா என்னிடம் இருந்த கிரிக்கெட் கிட முழுவதுமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. எனக்கு புதிதாக ஒன்று தேவைப்படுகிறது என கூறினேன். அடுத்த ஒரு வாரத்திற்குள் எனக்கு புதிதாக கிரிக்கெட் கிட் ஒன்றை சிவகார்த்திகேயன் அனுப்பி வைத்தார். இந்த சமயத்தில் தான், நான் சேலஞ்சர் டிராபியில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. சிவகார்த்திகேயனின் இந்த உதவி அந்த சமயத்தில் எனக்கு ரொம்பவே பேருதவியாக அமைந்தது” என்று கூறியுள்ளார்.