இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
‛பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் சின்னத்திரை ஹீரோவாக அறிமுகமானவர் அருண். அதேபோல் ‛ராஜா ராணி 2' தொடரில் வில்லியாக எண்ட்ரி கொடுத்து அசத்தியவர் வீஜே அர்ச்சனா. இவர்கள் இருவரும் காதலித்து வரும் தகவல் சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய் டிவி விருது நிகழ்ச்சியின் மூலம் வெளியானது. எனினும், இருவரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் அறிவித்ததில்லை. அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எதையும் வெளியிட்டதில்லை.
அண்மையில் நிறைவுற்ற பிக்பாஸ் சீசன் 8ல் அருண் பிரசாத் போட்டியாளராக கலந்து கொண்டபோது தான் அர்ச்சனா, அருண் பிரசாத் தான் தனது வாழ்க்கை என அறிவித்தார். இந்நிலையில், நேற்றைய தினம் காதலர் தினத்தை முன்னிட்டு அருண் பிரசாத் அர்ச்சனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தனது 5 வருட காதல் வாழ்க்கை குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அர்ச்சனாவுக்கு தனது காதலர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.