எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் சினிமாவின் வெள்ளி விழா படங்களில் முக்கியமானது 'பயணங்கள் முடிவதில்லை'. கோவையை சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜன் என்ற இளைஞர் சினிமா கனவில் 'பயணங்கள் முடிவதில்லை' என்ற கதையை வைத்துக் கொண்டு அதற்காக தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருந்தபோது அப்போது கோவை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தயாராக இருந்த கோவை தம்பியை சந்தித்து கதை சொன்னார். அவரும் "தம்பி நான் எம்.எல்.ஏ, எம்பி, அமைச்சர் இப்படி ரூட் போட்டிருக்கேன் சினிமால இண்ட்ரஸ்ட் இல்லை" என்று கூறியிருக்கிறார். ஒரு வழியாக கடைசியாக "படத்திற்கு இளையராஜா மியூசிக் போட்டா தயாரிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
நேராக சென்னை வந்த சுந்தர்ராஜன், கங்கை அமரன் மூலம் இளையராஜாவை சந்தித்து கதை சொல்ல, கதை அவருக்கு பிடித்துப்போகிறது. காரணம் படத்தின் நாயகன் ஒரு பாடகன். இளையராஜா ஒப்புக் கொண்டதும் பணிகள் ஆரம்பித்தது. அப்போது 'பன்னீர் புஷ்பங்கள்' படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. அதில் நடித்த சுரேஷை ஹீரோவாக போடலாம் என்று தயாரிப்பாளர் சொல்ல, சுந்தர்ராஜனும் - சுரேஷை சந்திக்க சென்றார். அப்போது சுரேஷ் ஒரு கார் விபத்தில் சிக்கி எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு மாதங்கள் வரை அவருக்காக காத்திருக்க முடியாது என்று கருதிய சுந்தர்ராஜன், அப்போது கமல்ஹாசன் போன்ற தோற்றதுடன் வலம் வந்து கொண்டிருந்த மோகனை நடிக்க வைத்தார்.
இந்த படத்திற்கு பிறகுதான் மோகன், மைக் மோகனாகவும், வெள்ளி விழா நாயகனாகவும் ஆனார். நாயகியாக பூர்ணிமா தேர்வானார். ஆனால் அவரும் புதிய இயக்குனர், தயாரிப்பாளர் என்பதால் தயங்கினார். ஆனால் கங்கை அமரன் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து 'படம் மியூசிக்கல் சப்ஜெக்ட் ராஜா இசை அமைக்கிறார். பாட்டெல்லாம் ரெடி' என்று கூறி அவரை சம்மதிக்க வைத்தார். அதன்பிறகு படம் வெளியான தியேட்டர்களில் எல்லாம் 100 நாள்கள் ஓடியதும் கோவையில் ஒரு தியேட்டரில் 400 நாட்கள் ஓடியதும் வரலாறு.
ஒருவேளை சுரேஷ் இந்தப் படத்தில் நடித்திருந்தால் மோகன் இடத்தை அவர் பிடித்திருக்கலாம்.