யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
புகழ்பெற்ற அனைவருக்குமே முதல் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கும், இல்லாவிட்டால் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். அப்படி ஒரு நிகழ்வு கிருஷ்ணன் - பஞ்சு வாழ்விலும் நடந்தது.
தமிழ் சினிமாவின் முதல் இரட்டை இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. பராசச்தி, பைத்தியக்காரன், நல்லதம்பி, குலதெய்வம், புதையல், தெய்வபிறவி, அன்னை உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினர். இவர்கள் இயக்கிய முதல் படம் 'பூம்பாவை'.
இந்த படத்தின் கதையை கம்பதாசன் எழுதினார், மயிலாப்பூரில் வாழ்ந்த ஒரு தீவிர சிவபக்தையின் கதை. அந்த பக்தையாக யு.ஆர்.ஜீவரத்தினம் நடித்திருந்தார். அவருடன் கே.ஆர். ராமசாமி, கே.சாரங்கபாணி, கே.ஆர்.செல்லம், டி.ஆர். ராமச்சந்திரன், ஏ.ஆர்.சகுந்தலா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், டி.பாலசுப்ரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.ஆர்.துரைராஜ் மற்றும் 'கொட்டாபுலி' கே.பி.ஜெயராமன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தை லியோ பிலிம்ஸ் சார்பில் அடப்ல்லி ராமா ராவ் என்பவர் தயாரித்திருந்தார். கிருஷ்ணன்-பஞ்சு படத்தை இயக்கினார்கள். இது அவர்களது முதல் படம். படம் தயாரிப்பில் இருக்கும்போது தயாரிப்பாளருக்கும், இயக்குனர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 80 சதவிகித பணிகள் முடிந்ததிருந்த நிலையில் பாலாஜி சிங் என்ற வடநாட்டு இயக்குனரை கொண்டு படத்தின் மற்ற பணிகளை முடித்தார் தயாரிப்பாளர்.
படத்தின் டைட்டிலில் 'இயக்கம் பாலாஜி சிங்' என்றும், 'மேற்பார்வை கிருஷ்ணன்-பஞ்சு' என்றும் இடம் பெற்றது. என்றாலும் மனம் சோர்ந்து விடாமல் தொடர்ந்து 3 வருடங்கள் போராடி என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து, நடித்த 'பைத்தியக்காரன்' படத்தை இயக்கி பெரும் புகழ் பெற்றனர்.