அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி | பிளாஷ்பேக்: கலைஞர்கள் பேசாமல், பார்வையாளர்கள் பேசிய மவுனத் திரைப்படம் “பேசும்படம்” | 15 ஆண்டுகளுக்குபின் மங்கத்தா ரீ ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் போடும் திட்டம் | சென்சார் சான்றிதழ் வரலையா : டென்ஷனில் பராசக்தி, ஜனநாயகன் குழு | ஓமனில் டிரக்கிங் சென்ற பாடகி சித்ரா ஐயரின் சகோதரி உயிரிழப்பு | பாலா தயாரிப்பில் படம் இயக்கப் போகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? | இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது : இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தகவல் |

ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதியாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் 'அக்யூஸ்ட்'. இப்படத்தை கன்னட இயக்குனர் பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். உதயா நாயகனாக நடிக்கிறார்.
முன்பெல்லாம் சென்னை சென்ட்ரலில் இருந்த மத்திய சிறையில் அடிக்கடி படப்பிடிப்பு நடக்கும். தற்போது அந்த சிறை இடிக்கப்பட்டுவிட்டதால் பெரும்பாலும் சிறைச்சாலை செட் அமைத்தே படமாக்கி வருகிறார்கள். புழல் சிறையில் பாதுகாப்பு கருதி சினிமா படப்பிடிப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்துவதில் சிரமம் இருப்பதால் யாரும் செல்வதில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு புழல் மத்திய சிறையில் உரிய அனுமதி பெற்று 'அக்யூஸ்ட்' படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உதயா மற்றும் அஜ்மல், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் இதில் பங்கேற்றனர். கடந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. தற்போது சென்னைக்கு அருகே உள்ள குத்தம்பாக்கம் பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை சொல்லும் படமாக உருவாகி வருகிறது. படத்திற்கு மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார்.