ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இன்றைக்கு தமிழ் சினிமாவில் நவீன டிஜிட்டல் வசதியுடன் செய்யப்படும் தொழில்நுட்ப முயற்சிகள் அனைத்தும் அன்றைய கால கட்டத்திலேயே சிறிய அளவில் செய்யப்பட்டுள்ளது. 'உத்தம புத்திரன்' படத்தில் பி.யு.சின்னப்பா 2 வேடங்களில் நடித்தார். இரண்டு சின்னப்பாக்கள் ஒரே பிரேமில் தோன்றி நடித்தது அன்றைய தொழில்நுட்ப சாதனையாக இருந்தது. மக்களால் வியந்து பார்க்கப்பட்டது.
அதன்பிறகு மக்களை வியக்க வைத்தது 1944ம் ஆண்டு வெளிவந்த 'ஜெகதலபிரதாபன்' என்ற படத்தில் ஒரே பிரேமில் 5 பி.யு.சின்னப்பா தோன்றியதுதான். கதைப்படி அவர் ஒரு இசை கச்சேரி நடத்துவார். அந்த கச்சேரியில் மிருதங்கம், வயலின், வாய்ப்பாட்டு, ஜால்ரா, தப்பு என 5 இசை கருவிகளை பயன்படுத்தி அவரே அனைத்துமாய் அந்த கச்சேரியை நடத்துவார். இது அன்றைக்கு ஆச்சர்யப்பட வைத்தது. 80 வருடங்களுக்கு முன்பே இந்த தொழில்நுட்பத்தை மேனுவலாக சாதித்து காட்டியது தமிழ் சினிமா.
பின்னாளில் 'திருவிளையாடல்' படத்தில் 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடலில் சிவாஜி இப்படி நடித்திருப்பார். 'நவராத்திரி' படத்தில் 9 சிவாஜி ஒரே பிரேமில் வருவார்கள். ஜெகதலபிரதாபன் படத்தை எஸ்.எம்.ஸ்ரீமுலு நாயடு இயக்கினார். வி.கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்தார். பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரித்திருந்தது.




