யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் 'புஷ்பா-2'. இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை செய்தது. புஷ்பா படத்தின் முதல் பாகம் 400 கோடி வசூல் செய்த நிலையில் இந்த புஷ்பா-2 படமோ உலக அளவில் 1800 கோடி வசூல் செய்து இந்திய அளவில் 2024ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக முதலிடம் பிடித்தது.
அதையடுத்து இப்படம் திரைக்கு வந்து ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியிடப்பட்ட போதும், உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்ததோடு, தற்போது ஓடிடி தளத்திலும் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதன் மூலம் புஷ்பா-2 படம் இந்திய ரசிகர்களை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ரசிகர்களை கவர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது என்று அப்படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.