என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
‛ஆர். ஆர். ஆர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார். கடந்த வருடத்தில் இருந்து இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ் மற்றும் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா இணைந்துள்ளனர். சமீபத்தில் இதற்கான டெஸ்ட் லுக் படப்பிடிப்பிற்காக பிரியங்கா சோப்ரா ஹைதராபாத்திற்கு கடந்த வாரத்தில் வந்திருந்தார். அப்போது அவரின் சம்பளம் தொகை குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பிரியங்கா சோப்ரா, பாலிவுட் மற்றும் சில ஆங்கில படங்களில் நடித்துள்ளதால் வெளிநாடுகளிலும் அவர் புகழ்பெற்ற நடிகை என்பதால் அவர் ரூ. 30 கோடி சம்பள தொகை கேட்டுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனமும் கொடுக்க முன்வந்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.