ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! | சூர்யா 45வது படத்தில் வில்லன் வேடத்தில் மன்சூர் அலிகான்! | எஸ்.எஸ்.ராஜமவுலி, மகேஷ் பாபு படத்திற்காக பிரியங்கா சோப்ராவின் சம்பளம் எவ்வளவு? | நாளை வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பு! | அஜித்குமார் உடல் எடையை குறைத்தது எப்படி! - சீக்ரெட்டை வெளியிட்ட ஆரவ் | திரைக்கு வந்து ஒன்பது நாட்களில் 13 கோடிக்கு மேல் வசூலித்த குடும்பஸ்தன்! | வேட்டையன் வில்லன் ராணாவை இயக்கும் பி.எஸ்.மித்ரன்! |
‛ஆர். ஆர். ஆர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார். கடந்த வருடத்தில் இருந்து இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ் மற்றும் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா இணைந்துள்ளனர். சமீபத்தில் இதற்கான டெஸ்ட் லுக் படப்பிடிப்பிற்காக பிரியங்கா சோப்ரா ஹைதராபாத்திற்கு கடந்த வாரத்தில் வந்திருந்தார். அப்போது அவரின் சம்பளம் தொகை குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பிரியங்கா சோப்ரா, பாலிவுட் மற்றும் சில ஆங்கில படங்களில் நடித்துள்ளதால் வெளிநாடுகளிலும் அவர் புகழ்பெற்ற நடிகை என்பதால் அவர் ரூ. 30 கோடி சம்பள தொகை கேட்டுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனமும் கொடுக்க முன்வந்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.