கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான லப்பர் பந்து படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுவாசிகா. 15 வருடங்களுக்கு முன்பே தமிழில் சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் மலையாள திரை உலகிற்கு சென்று முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பினார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
அதேசமயம் கடந்த வருடம் ஜனவரி மாதம் தனது காதலரும், சின்னத்திரை நடிகருமான கேரளாவைச் சேர்ந்த பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுவாசிகா. அப்போது அவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. தற்போது திருமணம் முடிந்து ஒரு வருடம் நிறைவுற்ற நிலையில் நேற்று இந்து தமிழ் முறைப்படி மீண்டும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அதேசமயம் இது உறவினர்கள், நண்பர்கள் என அழைத்து மிகப்பெரிய அளவில் நடைபெறாமல் இந்து முறையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பத்திற்காக, அதை நினைவாக வைத்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷூட்டிங் போல இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர். “ஷூட்டிங் என்றாலும் கூட நிஜமாகவே திருமணம் செய்தது போன்ற உணர்வு எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது” என சுவாசிகாவின் கணவர் பிரேம் ஜேக்கப் கூறியுள்ளார்.