தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான லப்பர் பந்து படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுவாசிகா. 15 வருடங்களுக்கு முன்பே தமிழில் சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் மலையாள திரை உலகிற்கு சென்று முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு திரும்பினார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
அதேசமயம் கடந்த வருடம் ஜனவரி மாதம் தனது காதலரும், சின்னத்திரை நடிகருமான கேரளாவைச் சேர்ந்த பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுவாசிகா. அப்போது அவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. தற்போது திருமணம் முடிந்து ஒரு வருடம் நிறைவுற்ற நிலையில் நேற்று இந்து தமிழ் முறைப்படி மீண்டும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அதேசமயம் இது உறவினர்கள், நண்பர்கள் என அழைத்து மிகப்பெரிய அளவில் நடைபெறாமல் இந்து முறையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பத்திற்காக, அதை நினைவாக வைத்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷூட்டிங் போல இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர். “ஷூட்டிங் என்றாலும் கூட நிஜமாகவே திருமணம் செய்தது போன்ற உணர்வு எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது” என சுவாசிகாவின் கணவர் பிரேம் ஜேக்கப் கூறியுள்ளார்.