ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கிலும் நுழைந்து அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துவிட்டார். தற்போது ஹிந்தியிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகிவிட்டார். ஹிந்தியில் அவர் நடித்து வெளிவந்த 'அனிமல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்துயும், ஹிந்தியில் அதிகம் வசூலித்த 'புஷ்பா 2' படத்தின் வசூலும் அவரை டாப் நடிகையாக்கிவிட்டது.
ராஷ்மிகா மந்தனா தற்போது சரித்திரப் படமான 'சாவா' என்ற ஹிந்திப் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. யு டியுப் தளத்தில் 35 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மராட்டிய மன்னரான சத்ரபதி சம்பாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. இப்படத்தில் மகாராணி யேசுபாய் என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். அடுத்த மாதம் 14ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தில் தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா எப்படி மராட்டிய மகாராணியாக நடிக்கத் தேர்வு செய்தீர்கள் என இயக்குனர் லஷ்மண் உடேகரிடம் கேட்டுள்ளார்கள். அதற்கு அவர், “ராஷ்மிகாவின் கண்களில் ஒரு தூய்மை இருக்கும்,” என்று பதிலளித்துள்ளார். ஹிந்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அடுத்த படமாக 'சாவா' படம் இருக்கிறது.