விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. இடையில் ஒரு படத்தை தயாரிக்க போய் அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். இருப்பினும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். சில மாதங்களாக இவர் வாடகை தரவில்லை என ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக கஞ்சா கருப்புக்கும், ரமேஷிற்கும் பிரச்னை உருவாகி இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டனர்.
ரமேஷ் அளித்துள்ள புகாரில் ‛‛கஞ்சா கருப்பு ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார். வீட்டை வேறு ஒரு நபருக்கு உள் வாடகைக்கு விட்டு, மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் நடத்துகிறார். வீட்டை காலி பண்ண சொல்லியும், வாடகை தரச் சொல்லி கேட்டால் மிரட்டல் விடுக்கிறார்'' என தெரிவித்துள்ளார்.
இதுஒருபுறமிருக்க கஞ்சா கருப்பு அளித்துள்ள புகாரில், நான் வீட்டில் இல்லாத சமயத்தில் உரிமையாளர் ரமேஷ் பூட்டை உடைத்து வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட முயற்சித்துள்ளார். தனது உடைமைகளையும் சேதப்படுத்தி உள்ளார்'' என தெரிவித்துள்ளார்.
இதனிடையே கஞ்சா கருப்பு தான் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு போலீஸ் உடன் சென்று பார்த்துள்ளார். அங்கு பொருட்கள் சேதமாகி இருப்பதாக கூறி இருக்கும் அவர், தனது கலைமாமணி பட்டத்தையும் காணவில்லை என்றும், 1.5 லட்சம் ரூபாய் பணம் காணவில்லை என போலீஸில் கதறி உள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.