இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஹிந்தி படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவரா என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து தற்போது ராம்சரண் நடிக்கும் 16வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில், ஹிந்தி இயக்குனர் கரண் ஜோகரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்வி கபூரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுந்தது.
அதற்கு ஜான்வி, திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து கணவர் மற்றும் பிள்ளைகளுடன் திருப்பதியில் குடியேற வேண்டும். குடும்பத்தாருடன் அங்கு நேரத்தை செலவிட விரும்புவதாகவும், வாழை இலையில் சாப்பிட்டு கோவிந்தா கோவிந்தா என சொல்ல வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
ஜான்வி கபூர் தனது தந்தை மற்றும் தங்கையுடன் அவ்வப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.