தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
ஹிந்தி படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவரா என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து தற்போது ராம்சரண் நடிக்கும் 16வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில், ஹிந்தி இயக்குனர் கரண் ஜோகரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்வி கபூரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுந்தது.
அதற்கு ஜான்வி, திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து கணவர் மற்றும் பிள்ளைகளுடன் திருப்பதியில் குடியேற வேண்டும். குடும்பத்தாருடன் அங்கு நேரத்தை செலவிட விரும்புவதாகவும், வாழை இலையில் சாப்பிட்டு கோவிந்தா கோவிந்தா என சொல்ல வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
ஜான்வி கபூர் தனது தந்தை மற்றும் தங்கையுடன் அவ்வப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.