வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
நடிகர் விஜய் தனது 69வது படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இந்தநிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷாவும் விரைவில் நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாக தகவல் உலா வருகிறது.
தற்போது தமிழில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக்லைப் போன்ற படங்களில் நடித்துள்ள திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 வது படத்தில் நடித்து வருகிறார். அதோடு, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் கைவசம் உள்ள படங்களோடு நடிப்புக்கு அவர் முழுக்குப் போடப்போவதாகவும், சினிமாவை விட்டு வெளியேறும் த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து அரசியலில் பயணிக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுபற்றி விசாரிக்க த்ரிஷாவின் அம்மா உமாவை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் கூறுகையில், ‛‛அந்த செய்தி உண்மையல்ல, தொடர்ந்து த்ரிஷா நடிப்பார்'' என்றார்.