இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் விஜய் தனது 69வது படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இந்தநிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷாவும் விரைவில் நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாக தகவல் உலா வருகிறது.
தற்போது தமிழில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக்லைப் போன்ற படங்களில் நடித்துள்ள திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 வது படத்தில் நடித்து வருகிறார். அதோடு, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் கைவசம் உள்ள படங்களோடு நடிப்புக்கு அவர் முழுக்குப் போடப்போவதாகவும், சினிமாவை விட்டு வெளியேறும் த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து அரசியலில் பயணிக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுபற்றி விசாரிக்க த்ரிஷாவின் அம்மா உமாவை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் கூறுகையில், ‛‛அந்த செய்தி உண்மையல்ல, தொடர்ந்து த்ரிஷா நடிப்பார்'' என்றார்.