துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
நடிகர் ரஜினிகாந்த் தனது சூப்பர் ஹிட்டான பாட்ஷா, சந்திரமுகி படங்களின் இரண்டாம் பாக கதைகளில் நடிக்க மறுத்துவிட்டார். என்றாலும் தற்போது நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போகிறார். இதற்கு முக்கிய காரணம் நெல்சன் சொன்ன கதை ரஜினியை பெரிய அளவில் இம்ப்ரஸ் பண்ணிவிட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது.
ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர் நடிகைகள் இந்த படத்திலும் நடிக்கப் போகிறார்கள். என்றாலும் ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் நெல்சன். அவர் மட்டுமின்றி இன்னும் சில பிறமொழி நடிகர்களையும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.