22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
தென்னகத்தின் இசை குயில் என்றும், சின்னகுயில் சித்ரா என்றும் அழைக்கப்படுகிறவர் கே.எஸ்.சித்ரா. அனைத்து இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரஞ்ச் உள்ளிட்ட சர்வதேச மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார், 6 முறை தேசிய விருதுகளையும், 43 மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.
சித்ரா திரைப்படங்களில் பாடுவதோடு, சின்னத்திரை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இளம் கலைஞர்களையும் ஊக்குவித்து வருகிறார். இதுதவிர உலகின் எல்லா நாடுகளிலும் இசை கச்சேரிகளில் பாடியுள்ளார். இந்த நிலையில் அவர் தனிப்பட்ட முறையில் சோலோவாக இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்துகிறார். 'கே.எஸ்.சித்ரா லைவ் இன் கான்செட்' என்ற பெயரில் இதனை நடத்துகிறார். வருகிற பிப்ரவரி 8ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.