சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
கே.பாக்யராஜின் படங்களுக்கு அவரது கடைசி படம் வரைக்கும் பெண்கள்தான் அதிக அளவில் ரசிகர்களாக இருந்தார்கள். அவரது படங்களை வெற்றிப் படமாக்கியதும் அவர்கள்தான். பாக்யராஜ் வேகமாக வளர்ந்து வந்த காலத்தில் தனது பாணியில் இருந்து மாறி அவர் இயக்கிய படம் 'விடியும் வரை காத்திரு'. 'கன்னிப் பருவத்திலே' படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும், இந்த படத்தில் அவர் கொலைகார வில்லனாக நடித்தார்.
ஒரு பணக்கார வீட்டுக்குள் பாசக்காரன்போன்று வேஷம் போட்டு சென்று அந்த சொத்துகளை பறிக்க அவர் செய்யும் தந்திரங்களும், கொலைகளும்தான் படம். இந்த படத்திற்கு முன்புதான் 'மவுன கீதங்கள்' வெளிவந்திருந்தது. அதில் நேர்மையான ஒரு ஆண் மகனாக நடித்து பெண்கள் மத்தியில் நல்ல இமேஜை பெற்றிருந்த நேரத்தில் இப்படி ஒரு கேரக்டரில் அவர் நடித்ததை அவர்கள் ஏற்கவில்லை. படத்தில் அவர் நடிப்பும் பாராட்டும்படி இல்லை.
இதனால் இந்த படம் வழக்கமான வெற்றியை பெறவில்லை. என்றாலும் திரைக்கதை, பின்னணி இசை, வசனம் இவற்றுக்காக படம் ஓரளவுக்கு ஓடியது. ஆண் ரசிகர்கள் படத்தை ரசித்தார்கள். சத்யகலா நாயகியாகவும், கராத்தே மணி போலீஸ் அதிகாரியாகவும் நடித்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.