இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
மலையாள திரை உலகில் சமீப காலமாக இரண்டு கதாநாயகிகள் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறார்கள். வெற்றி படங்களில் நடித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் மமிதா பைஜூ. இன்னொருவர் அனஸ்வரா ராஜன். இவர்கள் இருவருமே ஒரே காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள் தான். இதில் பிரேமலு படத்திற்கு முன்பே அனஸ்வரா ராஜன் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமானவர். பிரேமலு வெற்றிக்குப் பிறகுதான் மமிதா பைஜூ அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறார். தற்போது விஜய் படத்தில் நடித்து வரும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.
அனஸ்வராவும் மமிதாவும் 'சூப்பர் சரண்யா' என்கிற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இருவருமே வளர்ந்து வருவதால் இருவருக்குள்ளும் போட்டி ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் எதிரிகள் போல ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லை என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அனஸ்வரர் ராஜன் கூறும்போது, “நானும் மமிதா பைஜூவும் இதயபூர்வமான நட்புடன் பழகி வருகிறோம். நாங்கள் போட்டியாளர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் எங்கள் குரூப்பில் இருக்கும் மேத்யூ தாமஸ் நஸ்லேன், மமிதா உள்ளிட்ட அனைவருமே யாரும் யாரையும் போட்டியாக கருதுவதில்லை. எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அதில் எப்படி சிறப்பாக எங்களை வெளிப்படுத்த முடியும் என்பதை தான் பார்க்கிறோம். எதனால் இப்படி ஒரு செய்தி பரவியது என்று தெரியவில்லை” என கூறியுள்ளார்.