மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை |
தனுஷ் இயக்கம், நடிப்பில் தயாராகி வரும் படம் 'இட்லி கடை'. இப்படத்தை ஏப்ரல் 10ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இப்படத்திற்காக வெளிநாட்டில் இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறதாம். அதற்காக நித்யா மேனனிடம் தேதிகளைக் கேட்டால் அவர் தன்னிடம் தேதிகள் இல்லை என்று சொல்லிவிட்டாராம்.
பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்காக மார்ச் மாதம் வரை தன்னுடைய தேதிகளை ஏற்கெனவே கொடுத்துவிட்டதால் 'இட்லி கடை' படத்திற்கு மேலும் தேதிகளைத் தர வாய்ப்பில்லை என்றாராம். நித்யாவிடம் வாங்கிய தேதிகளில் தனுஷ் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தாமல் வேறு சிலரை வைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார். தன்னுடைய தேதிகளை சரியாகப் பயன்படுத்தாமல் வீணாக்கியதாக நித்யா மேனன் சொல்லிவிட்டாராம்.
வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்ட நிலையில் நித்யா மேனன் தந்த இந்த சிக்கலால் படப்பிடிப்பை நடத்துவதில் பிரச்சனை வந்துள்ளது. நித்யாவிடம் பேசி சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்களாம். தனுஷிற்கு இடையில் உடல்நிலை சரியில்லாமல் போனதால்தான் இந்த நிலை என்று சொல்லி புரிய வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். நித்யா சமாதானம் ஆவாரா இல்லையா என்பது இனிமேல்தான் தெரியும் என கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.