புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
தனுஷ் இயக்கம், நடிப்பில் தயாராகி வரும் படம் 'இட்லி கடை'. இப்படத்தை ஏப்ரல் 10ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இப்படத்திற்காக வெளிநாட்டில் இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறதாம். அதற்காக நித்யா மேனனிடம் தேதிகளைக் கேட்டால் அவர் தன்னிடம் தேதிகள் இல்லை என்று சொல்லிவிட்டாராம்.
பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்காக மார்ச் மாதம் வரை தன்னுடைய தேதிகளை ஏற்கெனவே கொடுத்துவிட்டதால் 'இட்லி கடை' படத்திற்கு மேலும் தேதிகளைத் தர வாய்ப்பில்லை என்றாராம். நித்யாவிடம் வாங்கிய தேதிகளில் தனுஷ் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தாமல் வேறு சிலரை வைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார். தன்னுடைய தேதிகளை சரியாகப் பயன்படுத்தாமல் வீணாக்கியதாக நித்யா மேனன் சொல்லிவிட்டாராம்.
வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்ட நிலையில் நித்யா மேனன் தந்த இந்த சிக்கலால் படப்பிடிப்பை நடத்துவதில் பிரச்சனை வந்துள்ளது. நித்யாவிடம் பேசி சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்களாம். தனுஷிற்கு இடையில் உடல்நிலை சரியில்லாமல் போனதால்தான் இந்த நிலை என்று சொல்லி புரிய வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். நித்யா சமாதானம் ஆவாரா இல்லையா என்பது இனிமேல்தான் தெரியும் என கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.