இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மாதவன் நடித்த ‛மின்னலே' படத்தில் இயக்குனரானவர் கவுதம் மேனன். அதையடுத்து 2003ல் சூர்யா நடிப்பில் ‛காக்க காக்க' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் சூர்யாவின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. அதையடுத்து 2008ம் ஆண்டில் ‛வாரணம் ஆயிரம்' என்ற படத்தையும் சூர்யா நடிப்பில் இயக்கினார் கவுதம் மேனன். அதன் பிறகு அவர்கள் இருவரும் இணையவில்லை.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ‛டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் கவுதம் மேனன். அந்த படம் ஜனவரி 23ம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்தபடியாக விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் கவுதம் மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களுக்கு பிறகு சூர்யாவுடன் மீண்டும் இணையாதது குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛துருவ நட்சத்திரம் படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம்தான் சொன்னேன். ஆனால் அந்த கதையில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அதன் காரணமாகவே நாங்கள் மீண்டும் இணையவில்லை. அவரை வைத்து காக்க காக்க, வாரணம் ஆயிரம் என்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறேன். அதற்காகவாவது அவர் என்னை நம்பி இருக்கலாம். அவர் துருவ நட்சத்திரத்தில் நடிக்க மறுத்தது எனக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது'' என்று கூறியிருக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன்.