துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
ஒவ்வொரு ஆண்டு பாலிவுட்டில் உள்ள திரைக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைக்கு பின்னால் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மகா ஆரோக்யா கேம்ப் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் நடிகை பூனம் தில்லான், நடிகர்கள் தீபக் பிரசார், விந்து தாரா சிங், தீரஜ் குமார், இசையமைப்பாளர் திலீப் சென், பாடகி மதுஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நடிகர் தீரஜ் குமார் கூறுகையில் ‛‛டாக்டர் தர்மேந்திர குமார் தனியாக இதை துவங்கினார். பின்னர் அவருக்கு நாங்கள் எல்லாம் துணை நின்றோம். இது திரையுலகினருக்கான ஒரு வரலாற்று முன்னெடுப்பு. ஜன., 19ல் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுங்கள்'' என்றார்.
டாக்டர் தர்மேந்திர குமார் கூறுகையில், ‛‛இந்த ஆண்டு முகாமுக்கு ரூ.4 கோடிக்கு மேல் மருந்துகளை கொண்டு வருகிறோம். ஒவ்வொரு நோய்க்கும் பல மருத்துவர்கள் இங்கு வருவார்கள். இம்முறை பெண்களுக்கும் பல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.