Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசன் வந்த பிறகு 'இந்தியன் 3' பஞ்சாயத்து

07 ஜன, 2025 - 10:41 IST
எழுத்தின் அளவு:
After-Kamal-Haasans-arrival,-Indian-3-panchayat


லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'இந்தியன் 2' படம் தோல்வியைத் தழுவியது. அப்படத்திற்கான மூன்றாம் பாகமும் தயாராகி இந்த வருடம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் 'இந்தியன் 3' படத்தின் வேலைகளை இயக்குனர் ஷங்கர் இன்னும் முடித்துத் தரவில்லை. தெலுங்கில் அவர் இயக்கி வந்த 'கேம் சேஞ்ஜர்' படத்திற்காக அவர் சென்றுவிட்டார்.

'கேம் சேஞ்ஜர்' படம் இந்த வாரம் ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. 'இந்தியன் 3' படத்தின் வேலைகளை முடிக்காமல் 'கேம் சேஞ்ஜர்' படத்தைத் தமிழகத்தில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்த் திரைப்பட சங்கங்களிடம் லைகா நிறுவனம் புகார் அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் உள்ளார். அவர் திரும்பி வந்த பின் 'இந்தியன் 3' படத்தின் பஞ்சாயத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதை லைகா நிறுவனமும் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால், 'கேம் சேஞ்ஜர்' படத்தைத் தமிழகத்தில் திரையிட லைகா எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கேம் சேஞ்ஜர்' படத்தில் விஜய்க்கு ஆதரவான வசனங்கள்'கேம் சேஞ்ஜர்' படத்தில் விஜய்க்கு ... பாலிவுட் கதாநாயகிகளை நம்பும் தெலுங்கு சினிமா பாலிவுட் கதாநாயகிகளை நம்பும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)