தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி 2' படம் தந்த பான் இந்தியா வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் வெளியான அனைத்து முக்கியமான பான் இந்தியா படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அவற்றில் பாலிவுட் நடிகைகள்தான் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள்.
பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ' படத்தில் ஷ்ரத்தா கபூர், ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஆலியா பட், 'கல்கி 2898 ஏடி' படத்தில் தீபிகா படுகோனே, 'தேவரா' படத்தில் ஜான்வி கபூர் என பாலிவுட் நடிகைகள் நடித்திருந்தார்கள். தற்போது வெளியாக உள்ள 'கேம் சேஞ்ஜர்' படத்திலும் பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி தான் நடித்துள்ளார்.
'புஷ்பா 1, 2' படங்களில் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, 'சலார்' படத்தில் தமிழ் நடிகையான ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஹிந்தி கதாநாயகி இல்லை என்றாலும் 'புஷ்பா 2' படம் இந்திய அளவில் நம்பர் 1 வசூலைக் குவித்தது. ஆக, படத்தின் வெற்றி, கதாநாயகி யார் என்பதில் இல்லை என்பதை 'புஷ்பா 2' படத்தின் வெற்றி புரிய வைத்துள்ளது.