விமானப்படை அதிகாரி தோற்றத்தில் தனுஷ் | பிளாஷ்பேக்: விஷம் அருந்தி வெள்ளித்திரை வாய்ப்பினைப் பெற்ற ஜே பி சந்திரபாபு | கமல்ஹாசன் சொத்து ரூ.305 கோடி, கடன் ரூ.49 கோடி | ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? |
தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி 2' படம் தந்த பான் இந்தியா வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் வெளியான அனைத்து முக்கியமான பான் இந்தியா படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அவற்றில் பாலிவுட் நடிகைகள்தான் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள்.
பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ' படத்தில் ஷ்ரத்தா கபூர், ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஆலியா பட், 'கல்கி 2898 ஏடி' படத்தில் தீபிகா படுகோனே, 'தேவரா' படத்தில் ஜான்வி கபூர் என பாலிவுட் நடிகைகள் நடித்திருந்தார்கள். தற்போது வெளியாக உள்ள 'கேம் சேஞ்ஜர்' படத்திலும் பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி தான் நடித்துள்ளார்.
'புஷ்பா 1, 2' படங்களில் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, 'சலார்' படத்தில் தமிழ் நடிகையான ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஹிந்தி கதாநாயகி இல்லை என்றாலும் 'புஷ்பா 2' படம் இந்திய அளவில் நம்பர் 1 வசூலைக் குவித்தது. ஆக, படத்தின் வெற்றி, கதாநாயகி யார் என்பதில் இல்லை என்பதை 'புஷ்பா 2' படத்தின் வெற்றி புரிய வைத்துள்ளது.