வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
மலையாள திரையுலகில் 50 வருடங்களாக பிரபலமான நாவல் எழுத்தாளர், கதாசிரியர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமையுடன் வலம் வந்தவர் எம்.டி வாசுதேவன் நாயர், இவரது பல சிறுகதைகளும் நாவல்களும் மலையாளத்தில் திரைப்படங்களாக உருவாகி இருக்கின்றன. மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்கள் இவரது கதைகளிலும் இவரது டைரக்ஷனிலும் கூட நடித்திருக்கிறார்கள்.
91 வயதான இவர் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். மலையாளத் திரை உலகை சேர்ந்தவர்களும் இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலக, அரசியல் பிரபலங்களும் கூட இவரது மறைவுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்தனர், மோகன்லால் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்,
ஆனால் இவரது கதையில் உருவான ஒரு வடக்கன் வீரகதா, பழசி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பெயர் பெற்றவரான மம்முட்டி இவர் இறந்த சமயத்தில் அசர்பைஜான் நாட்டில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார். அதனால் அவரால் உடனடியாக கேரளா திரும்ப முடியவில்லை. மேலும் படப்பிடிப்பு முடிந்து அவர் திரும்ப முயற்சித்த சமயத்தில் அசர்பைஜானில் சில நாட்களுக்கு முன்பு ஏற்படுத்த விமான விபத்து காரணமாக அவரது பயணம் இன்னும் சில நாட்கள் தள்ளிப் போய் நேற்று தான் அவர் கொச்சி வந்து சேர்ந்தார். வந்தவுடனேயே நேரடியாக கோழிக்கோட்டில் உள்ள எம்.டி வாசுதேவன் நாயர் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்த மம்முட்டி அவரது மனைவி கலாமண்டலம் சரஸ்வதி மற்றும் மகள் அஸ்வதி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். மம்முட்டியுடன் பிரபல காமெடி நடிகரும் இயக்குனருமான ரமேஷ் பிஷரோடியும் உடன் சென்று இருந்தார்.