வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவான தெலுங்குப் படமான 'புஷ்பா 2', பான் இந்தியா படமாக கடந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியானது. படம் வெளியாகி தற்போது நான்கு வாரங்கள் முடிவடைந்துள்ளது.
இந்த நான்கு வாரங்களில் உலகம் முழுவதும் 1799 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்த வசூலை மட்டுமே தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மொழி வாரியாக, மாநிலங்கள் வாரியாக அவர்கள் வெளியிடுவதில்லை. இருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் விசாரித்தவரையில் கிடைத்த வசூல் தகவல்கள் இதோ..
ஹிந்தியில் மட்டும் இப்படம் 900 கோடி வசூலையும், தெலுங்கில் 350 கோடி வசூலையும், தமிழகத்தில் 75 கோடி வசூலையும், கர்நாடகாவில் 95 கோடி வசூலையும், கேரளாவில் 15 கோடி வசூலையும், வெளிநாடுகளில் 364 கோடி வசூலையும் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதுவரை தெலுங்குத் திரைப்படங்களில் 'பாகுபலி 2' படம் ஆந்திரா, தெலங்கானாவில் 415 கோடி வசூலை அள்ளியது. ஆனால், 'புஷ்பா 2' படம் அந்த சாதனையை முறியடிக்காமல் 350 கோடி வசூலை பெற்றுள்ளது.