சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? |
மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ஜீத்து ஜோசப் டைரக்சனின் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகமும் வெளியாகி முதல் பாகத்திற்கு குறைவில்லாத சமமான வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்து தலைவராக மோகன்லாலும் அவரது மனைவியாக நடிகை மீனாவும் நடித்திருந்தனர். இந்த படம் மீனாவுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததுடன் அவரது புதிய இன்னிங்ஸையும் வெற்றிகரமாக துவக்கி வைத்தது.
ஆனால் முதலில் இந்த கதாபாத்திரம் என்னைத்தான் தேடி வந்தது, ஆனால் என்னால் நடிக்க முடியாமல் போனது என்று தற்போது வருத்தத்துடன் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் நடிகை ஷோபனா. எண்பது 90களில் மோகன்லாலுடன் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்தவர் தான் ஷோபனா. திரிஷ்யம் பட வாய்ப்பு வந்தபோது அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அந்த நேரத்தில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் திர என்கிற படத்தில் நான் நடித்து வந்தேன். அதன் காரணமாக திரிஷ்யம் படத்திற்கு என்னால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை. அப்படி ஒதுக்க முடியாது என்பது தெரிந்ததால் திரிஷ்யம் படத்தின் ஸ்கிரிப்ட்டை கூட நான் படிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஷோபனா.