தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
'வெங்காயம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பயாஸ்கோப்' திரைப்படத்தில் சத்யராஜ், சேரன், சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். இந்த படம் நாளை வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசியதாவது : சுயாதீன திரைப்படங்கள் தான் மக்களின் பிரச்னையை பேசும் என்பதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சிறிய முதலீட்டு திரைப்படங்கள் தான் மக்களின் வாழ்வியலையும், மக்களின் துக்கங்களையும் பேசுகின்றன. சிறிய முதலீட்டு திரைப்படங்களை உருவாக்கும் போது தான் படைப்பாளிகளுக்கு மனநிறைவு கிடைக்கும் என நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன்.
உலகம் முழுவதும் சுயாதீன திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. உங்களிடம் நல்லதொரு கதை இருக்கிறதா, அதனை படமாக படைப்பாக உருவாக்குங்கள் என்றுதான் நான் புதுமுக இயக்குநர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதற்கான சந்தைப்படுத்துதல் என்பது கடினமாக இருந்தது. அதனை தற்போது புரொடியூசர் பஜார் மற்றும் ஆஹா பைண்ட் சந்தைப்படுத்தும். அதனால் கவலைப்பட வேண்டாம். உற்சாகமாக பணியாற்றுங்கள். இவர்கள் என்னை எப்படி காப்பாற்றினார்களோ, அதே போல் அனைத்து புதுமுக படைப்பாளிகளையும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வெங்காயம் படத்தினை வெளியிடுவதற்கு என்ன தடைகள் இருந்ததோ அதே தடைகள் பயாஸ்கோப் படத்திற்கும் இருந்தது. இவ்வாறு பேசினார்.