சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
இயக்குனர் பேரரசு தமிழில் 'திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி' உள்ளிட்ட பல மசாலா கமர்ஷியல் படங்களை இயக்கியவர். சமீபத்தில் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் படங்களை இயக்காமல் இருந்தார்.
தற்போது பேரரசு அளித்த பேட்டி ஒன்றில், திருப்பதி தலைப்பு குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி, "திருப்பதி படத்திற்கு முதலாக வைத்திருந்த தலைப்பு 'வெள்ளையன்'. ஆனால், அதற்கு முன்பு என் இயக்கத்தில் வெளிவந்த திருப்பாச்சி, சிவகாசி என ஊர் பெயர்கள் வைத்து வெளியாகி வெற்றி பெற்றதால் ஏ.வி.எம். சரவணன், ஊர் பெயரில் தலைப்பு வைத்தால் தான் உங்க ஸ்டைல் படமாக இருக்கும் என்றார். அதன் பிறகு தான் திருப்பதி என தலைப்பு வைத்தேன். அந்த படமும் ஹிட்டானதால் பேரரசு ஊரரசு ஆகி விட்டேன்" என தெரிவித்துள்ளார்.