தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தேசிங்கு பெரியசாமி ரஜினியுடன் ஒரு பிரமாண்டமான கதையை படமாக்க இருந்தார். அதன் பட்ஜெட் காரணமாக ரஜினி அந்த படத்தில் நடிக்கவில்லை.
அதன் பின்னர் அந்த கதையில் பட்ஜெட் குறைத்து ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு ராஜ்கமல் நிறுவனமும் வெளியேற வேறு தயாரிப்பாளர்களுக்கான தேடலில் சிம்பு ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இந்த கதையை நடிகர் அஜித் குமாரை சந்தித்து தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார். இதன் பேச்சுவார்த்தை முதற்கட்ட அளவில் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.