'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு |
தென்னிந்திய சினிமாவில் அது எந்த மொழியாகட்டும், 80, 90 கால கட்டங்களில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை ரியூனியன் என்கிற பெயரில் ஒரு நாள் ஒன்று கூடி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க கேரளாவிலும் அவ்வப்போது இது போன்ற ரீயூனியன் சில விஷயங்களுக்காக நடக்கிறது. அப்படி மலையாள சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுசித்ரா. தமிழில் சிநேகதியே, காசி, ஏர்போர்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
தற்போது இவர் பல வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் கேரளாவுக்கு வருகை தந்துள்ளார், இதை முன்னிட்டு இவரது நட்பு வட்டாரத்தில் உள்ள சீனியர் நடிகைகளான மேனகா, கார்த்திகா, வனிதா, சிப்பி, ஸ்ரீ லட்சுமி மற்றும் சோனா நாயர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை நடிகை கார்த்திகா (நாயகன் கமல் மகள்) மேற்கொண்டார்.
இந்த சந்திப்பு குறித்து நடிகை சுசித்ரா கூறும்போது, “இரண்டு வருடங்களுக்கு முன்பு லவ்ளீஸ் ஆப் திருவனந்தபுரம் என்கிற வாட்ஸ் அப் குரூப் துவங்கப்பட்டது. அதில் இவர்களுடன் நானும் ஆரம்பத்திலேயே இணைந்தேன். அமெரிக்காவில் இருந்ததால் இவர்கள் அடிக்கடி ஒன்று கூடும் ரீயூனியனில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த வருத்தம் இருந்தது. முன்பு கேரளா வரும் போதும் இவர்களில் ஒவ்வொருவரை அவ்வப்போது தனித்தனியாக பார்த்துவிட்டு செல்வேன். ஆனால் தற்போது கேரளா வர வேண்டிய வேலை இருந்தபோது அந்த தகவலை நான் தெரியப்படுத்தியதும் எனக்காக இவர்கள் அனைவரும் எனக்காக ஒன்றுகூடி உள்ளார்கள்.. மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ள சுசித்ரா கேரளாவில் 15 நாட்கள் முகாமிட்டுள்ளாராம்.