32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த மகாராஜா என்ற படம் 100 கோடி வசூல் சாதனை செய்த நிலையில், தற்போது அந்த படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை அடுத்து ஜப்பான் மொழியிலும் அப்படம் வெளியாக உள்ளது. மேலும், தற்போது ‛ஏஸ், ட்ரெயின்' படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி, பிக்பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛எனது மகன், மகளிடத்தில் நான் அப்பா என்று ஒருபோதும் அதிகாரம் செய்வதில்லை. அவர்களிடத்தில் நானும் ஒரு குழந்தை போன்றுதான் என்னை வெளிப்படுத்துகிறேன். அதோடு எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவர்கள் இருவரிடத்திலும் கருத்து கேட்பேன். அவர்களின் கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுப்பேன். முக்கியமாக படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் விஷயங்களை குடும்பத்தாரிடத்திலும் பகிர்ந்து கொள்வேன்'' என்று கூறியுள்ள விஜய் சேதுபதி, ‛‛என் மகன், மகளை பெயரைச் சொல்லி நான் அழைப்பதில்லை. என் மகன் சூர்யாவை அப்பா என்றும், மகள் ஸ்ரீஜாவை அம்மா என்றும்தான் நான் அழைத்து வருகிறேன்'' என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.