32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
நிறங்கள் மூன்று படத்திற்கு பிறகு, தற்போது ‛டிஎன்ஏ, அட்ரஸ், தானா' போன்ற படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்திலும் அவர் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்க, வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அதர்வாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த சிவகார்த்திகேயன் 25வது படத்தில் நடிப்பது குறித்து அதர்வா கூறுகையில், ‛‛பாலாவின் பரதேசி படத்தில் நடித்தபோதில் இருந்தே இயக்குனர் சுதா எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். நாம் இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து பணியாற்றுவோம் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். அதன் காரணமாகவே இந்த படத்தில் அவர் நடிக்க அழைத்ததும் சம்மதம் தெரிவித்தேன். இந்த படத்தில் அவர் எனக்கு ஒரு நல்ல வேடம் கொடுத்திருக்கிறார். இது சினிமாவில் எனக்கு திருப்புமுனையை தரக்கூடியதாக இருக்கும்'' என்கிறார் அதர்வா.