32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பை அந்தமான், கேரளா, மூணார், சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசரை, கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, டிச.,25ம் தேதி வெளியிட்டனர். இதில் படத்திற்கு ‛ரெட்ரோ' என தலைப்பு வைத்துள்ளதுடன், 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவித்தனர். இதில் குளக்கரை ஒன்றில் பூஜா ஹெக்டே உடன் சூர்யா பேசும் காட்சிகளும் இடம்பெற்றது. டீசரில் பூஜா ஹெக்டே பேசுவது போன்ற காட்சிகளும், வசனங்களும் இடம்பெறவில்லை. இதுகுறித்து, ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்த நிலையில், இப்படத்தில் பூஜா வாய் பேச முடியாதவராக நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.