பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

தாணு தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'அரசன்'. இதை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவாகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கோவில்பட்டியில் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படப்பிடிப்பில் ஆண்ட்ரியா இணைந்தனர். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி வந்து வெற்றிமாறன், சிம்பு இருவரையும் நட்பு ரீதியாக சந்தித்து பேசியதை தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார். இன்னும் விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அரசன் படத்தில் ஹார்ட் பீட் வெப் தொடர், டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் பிரபலமான யோகலட்சுமியும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.