புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
சிவகுமார் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று 'நெருப்பிலே பூத்த மலர்'. இதில் பூர்ணிமா ஜெயராம் அவரது ஜோடியாக நடித்தார். இவர்கள் தவிர சத்தார், வி.கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் நடித்தனர். கவுசி என்பவர் இயக்கினார். இந்த படத்தின் கதைப்படி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சிவகுமாரும், பூர்ணிமாவும் காதலிப்பார்கள். ஆனால் இவர்களின் காதலை சிவகுமாரின் அப்பா ஏற்கவில்லை. அவர்களை பிரித்து, மகனை பாதிரியார் ஆக்குகிறார். பல வருடங்களுகு பிறகு பூர்ணிமா ஆசிரியையாக பணியாற்றும் பள்ளிக்கே சிவகுமார் பாதராக செல்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
படத்தின் கிளைமாக்ஸில் சிவகுமார் ஒரு பெண்ணை கெடுத்து விட்டதாக கருதும் ஊர் பொதுமக்கள் அவரை தெருவில் ஓடவிட்டு கல்லால் அடிப்பார்கள்.
படத்தின் பணிகள் முடிந்ததும் சிவகுமார் தனது நண்பர்களுக்கு படத்தை போட்டுக் காட்டினார். அந்த சிறப்பு காட்சிக்கு சிவகுமாரின் மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் வந்திருந்தார்கள். சூர்யாவுக்கு 8 வயது கார்த்திக்கு 6 வயது. கிளைமாக்சில் சிவகுமார் அடிவாங்குவதை பார்த்த கார்த்தி 'அப்பாவை அடிக்காதீங்க... அப்பாவை அடிக்காதீங்க' என்று கதறி அழுதார். படம் விட்டு வெளியில் வந்தும் கார்த்தி அழுவதை நிறுத்தவில்லை. கார்த்திக்கிற்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தும் அன்று முழுக்க அழுது கொண்டே இருந்தாராம் கார்த்தி. பின்னர்தான் சினிமா வேறு, நிஜம் வேறு என மகனுக்கு புரிய வைத்தார் சிவகுமார்.