32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் நடித்துள்ள படம் 'மேக்ஸ்'. கன்னடத்தில் திரைக்கு வந்துள்ள இப்படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் நாளை வெளிவருகிறது. இதன் தமிழ் பதிப்பு டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுதீப், தயாரிப்பாளர் எஸ்.தாணு, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர்கள் மிஷ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கிச்சா சுதீப் பேசும்போது “அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயாவின் அற்புதமான கதையில் உருவான படம் இது. ஆக்ஷன் பிரியர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும். தமிழில் தாணு வெளியிடுகிறார். 'காக்க காக்க' படத்தின் கன்னட உரிமைகளை வாங்கும்போது ஒரு பைசாகூட அதற்காக பெற்றுக் கொள்ளவில்லை. அவர் போன்ற நல்ல தமிழ் தயாரிப்பாளர்கள் கன்னடத்திற்கு வரவேண்டும். இது எனது வேண்டுகோள்'' என்றார்.