32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
தமிழகத்தை சேர்ந்த குகேஷ் இளம் வயதிலிலேய உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். பிரதமர், ஜனாதிபதி, முதல்வர், கவர்னர் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக அரசு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் , இன்று(டிச., 26) குகேஷை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் அழைத்து பாராட்டினார். இதுபற்றி குகேஷ் கூறுகையில், ‛‛நன்றி ரஜினி சார், உங்கள் அன்பான வாழ்த்து நன்றி'' என தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது குகேஷின் பெற்றோரும் உடன் இருந்தனர்.
இதேப்போல் சிவகார்த்திகேயனும் குகேஷை தனது அலுவலகத்திற்கு அழைத்து நேரில் பாராட்டினார். செஸ் வடிவிலான கேக் வெட்டி அதனை அவருக்கு ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் அவருக்கு விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை பரிசளித்தார். குகேஷ் மென்மேலும் பல சாதனைகள் படைப்பதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து சிவகார்த்திகேயன் குறிப்பிடும்போது “குகேஷ் மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம். அவரை பாராட்டியன் மூலம் என்னை நான் பெருமைப்படுத்திக் கொண்டேன்” என்றார்.