ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நகைச்சுவை நடிகர் சூரி தமிழில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக மற்றும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளிவந்த 'விடுதலை 1' படத்தின் மூலம் சூரி கதையின் நாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 என கதையின் நாயகனாக தொடர்ந்து நடித்துள்ளார்.
தற்போது அளித்த பேட்டி ஒன்றில் சூரி கூறியதாவது, "அடுத்தடுத்து கதையின் நாயகனாக நடித்து வருகிறேன். இனி கதையின் நாயகன் ஆகவே என் பயணம் தொடரும். நல்ல கதை அமைந்தால் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பேன். ஆனால், அந்த படத்தில் ஹீரோ யார் என்பதை சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு எப்போதும் ஹீரோ என் தம்பி சிவகார்த்திகேயன் தான்" என தெரிவித்துள்ளார்.