நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் |
நகைச்சுவை நடிகர் சூரி தமிழில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக மற்றும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளிவந்த 'விடுதலை 1' படத்தின் மூலம் சூரி கதையின் நாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 என கதையின் நாயகனாக தொடர்ந்து நடித்துள்ளார்.
தற்போது அளித்த பேட்டி ஒன்றில் சூரி கூறியதாவது, "அடுத்தடுத்து கதையின் நாயகனாக நடித்து வருகிறேன். இனி கதையின் நாயகன் ஆகவே என் பயணம் தொடரும். நல்ல கதை அமைந்தால் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பேன். ஆனால், அந்த படத்தில் ஹீரோ யார் என்பதை சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு எப்போதும் ஹீரோ என் தம்பி சிவகார்த்திகேயன் தான்" என தெரிவித்துள்ளார்.