ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசேன் (வயது 73), உடல்நலக் குறைவால் காலமானார். ஜாகிர் உசேனுக்கு கடந்த ஒரு வார காலமாக இதயம் தொடர்பாக, பிரச்னை இருந்தது. அவர், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(டிச., 16) காலை ஜாகிர் உசேன் காலமானார். அவரது மறைவினால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சிறுவயது முதலே மஹாராஷ்டிராவில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். சிறந்த இசை சேவைக்காக மத்திய அரசின் பத்மபூஷண், பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார் ஜாகிர் உசேன்.
1951ல் புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்காவாவுக்கு மும்பையில் மகனாக பிறந்த உசேன், தனது தந்தையால் மூன்று வயது முதலே தாள வாத்தியத்திற்கு அறிமுகப்படுத்தபட்டார். தொடர்ந்து உலகம் முழுக்க தனது தபேலா மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த ஆண்டு, பேலா ப்ளெக், எட்கர் மேயர் மற்றும் ராகேஷ் சவுராசியா ஆகியோருடன் பாஷ்டோவுக்கான சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி உட்பட மூன்று கிராமி விருதுகளை வென்றார்.




