புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படத்தில் நடித்துள்ள சூர்யா, அதன் பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். சூர்யாவின் 45 வது படமான இப்படத்தின் பூஜை கோவையில் உள்ள ஆனைமலை மாசானியம்மன் கோவிலில் துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பும் அந்த பகுதியிலேயே நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் மௌனம் பேசியதே, ஆறு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் த்ரிஷா திரை உலகில் நடிக்க வந்து 22 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அவர் சூர்யா 45 வது படத்தில் நடிப்பதை அப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் நிறுவனம் ஒரு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதோடு படப்பிடிப்பு தளத்தில் அவர் 22 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு சூர்யா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அதை கேக் வெட்டி கொண்டாடினர்.