டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படத்தில் நடித்துள்ள சூர்யா, அதன் பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். சூர்யாவின் 45 வது படமான இப்படத்தின் பூஜை கோவையில் உள்ள ஆனைமலை மாசானியம்மன் கோவிலில் துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பும் அந்த பகுதியிலேயே நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் மௌனம் பேசியதே, ஆறு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் த்ரிஷா திரை உலகில் நடிக்க வந்து 22 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அவர் சூர்யா 45 வது படத்தில் நடிப்பதை அப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் நிறுவனம் ஒரு போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதோடு படப்பிடிப்பு தளத்தில் அவர் 22 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு சூர்யா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அதை கேக் வெட்டி கொண்டாடினர்.