சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? |
தமிழ்நாட்டில் பிறந்தாலும் தற்போது சர்வதே திரைப்பட இசை அமைப்பாளராக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைப்பதன் மூலம் ஆஸ்கர் விருதுகளை வென்று உலக புகழ் பெற்றுள்ளார். இதனால் சர்வதேச அளவில் பல பொறுப்புகள் அவரை தேடி வருகிறது.
அந்த வரிசையில் ஏ.ஆ.ரஹ்மானுக்கு இங்கிலாந்தில் உயரிய கவுரவம் கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற இசை நாடகம் மற்றும் சமகால நடனத்துக்கான கன்சர்வேட்டரியான டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த பதவியில் அவர் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது ''இந்த பொறுப்பை பாக்கியமாகவும், மரியாதைக்குரியதாகவும் கருதுகிறேன். இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்குமான உறவை வலுப்படுத்துவதில் நான் ஒரு காரணியாக இருப்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்”என்று தெரிவித்து உள்ளார்.