இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

கங்குவா படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயன்கர் இசையமைக்கின்றார். கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி உடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக எந்தவொரு படங்களிலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் விஜய் சேதுபதி.