பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒளிபரப்பாகி மக்கள் மனதிலும் தனியொரு இடத்தை பிடித்த தொடர் 'எதிர்நீச்சல்'. பாட்டி முதல் பாப்பா வரை ஒவ்வொரு கேரக்டரையும் செதுக்கி உருவாக்கப்பட்ட இந்த தொடர் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்ல ரீச்சானது. ஆனால், தவிர்க்கமுடியாத சில காரணங்களால் எதிர்நீச்சல் தொடர் திடீரென முடித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து சீசன் 2விற்கான பணிகளும் அதுகுறித்த அறிவிப்பும் அப்போதே வெளியாகியிருந்த நிலையில், ஜனனியாக நடித்து வந்த மதுமிதா 'எதிர்நீச்சல் 2'வில் நடிக்க போவதில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது சீசன் 2விற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில், புதுபுது அர்த்தங்கள் உள்ளிட்ட சில தொடர்களின் மூலம் பிரபலமான வீஜே பார்வதி ஜனனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெளிவாகிறது. புது ஜனனியை இப்போதே ரசிகர்களுக்கு பிடித்துவிட சீசன் 2வின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.