சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒளிபரப்பாகி மக்கள் மனதிலும் தனியொரு இடத்தை பிடித்த தொடர் 'எதிர்நீச்சல்'. பாட்டி முதல் பாப்பா வரை ஒவ்வொரு கேரக்டரையும் செதுக்கி உருவாக்கப்பட்ட இந்த தொடர் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்ல ரீச்சானது. ஆனால், தவிர்க்கமுடியாத சில காரணங்களால் எதிர்நீச்சல் தொடர் திடீரென முடித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து சீசன் 2விற்கான பணிகளும் அதுகுறித்த அறிவிப்பும் அப்போதே வெளியாகியிருந்த நிலையில், ஜனனியாக நடித்து வந்த மதுமிதா 'எதிர்நீச்சல் 2'வில் நடிக்க போவதில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது சீசன் 2விற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில், புதுபுது அர்த்தங்கள் உள்ளிட்ட சில தொடர்களின் மூலம் பிரபலமான வீஜே பார்வதி ஜனனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெளிவாகிறது. புது ஜனனியை இப்போதே ரசிகர்களுக்கு பிடித்துவிட சீசன் 2வின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.