திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்க மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா 2' படம் நேற்று முன்தினம் உலக அளவில் வெளியானது. தெலுங்கில் உருவான படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி உலகம் முழுவதும் வெளியானது.
தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வெளியாவது பல வருடங்களாக நடந்து வருகிறது. 'பாகுபலி 2' படத்திற்குப் பின் மற்ற தென்னிந்திய மொழிகளான கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது.
'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 ஏடி, தேவரா' ஆகிய படங்கள் புரியாத முதல் நாள் வசூல் சாதனையை தற்போது 'புஷ்பா 2' படம் புரிந்துள்ளது. தமிழகத்தில் முதல் நாள் வசூலாக 11 கோடியும், கர்நாடகாவில் 23 கோடியும், கேரளாவில் 6 கோடியுமாக வசூலித்துள்ளது. இதுவரை வெளியான எந்த ஒரு தெலுங்குப் படத்திற்கும் கிடைக்காத முதல் நாள் வசூல் இது என அதிகாரப்பூர்மாக வெளியிட்டுள்ளார்கள். அடுத்து மொத்த வசூலிலும் இப்படம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.