32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
மலையாள நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி மலையாள சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஜகமே தந்திரம், ஆக்ஷன், பொன்னியின் செல்வன் 1,2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழில் 'தக் லைப்' படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விலங்கு வெப் தொடர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கருடன் படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.