பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நாகசைதன்யா - சமந்தா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், நான்கு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்கள். அதையடுத்து நாகசைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இடையே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில் சமந்தா என்ற பெயரில் சோபிதாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த ஒரு பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அந்த பதிவை பார்த்துவிட்டு நடிகை சமந்தாதான் இந்த வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து கூறி வந்தார்கள். ஆனால் தற்போது அந்த பதிவை வெளியிட்டவர் சோபிதா துலிபாலாவின் தங்கையான டாக்டர் சமந்தா என்பது தெரிய வந்துள்ளது.
இப்படி ஒரு தகவல் வெளியானதை அடுத்து, அப்படி என்றால் இனிமேல் தனது மச்சினிச்சியை பெயர் சொல்லி அழைக்கும் ஒவ்வொரு நேரமும் நாகசைதன்யாவுக்கு முன்னாள் மனைவி சமந்தா ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருப்பார் என்று கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.