இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தெலுங்கில் தசரா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கத்தில் நானி அவரது 33வது படத்தில் நடிக்கின்றார். இதனை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் இந்த படத்திற்கு 'தி பாரடைஸ்' என தலைப்பு வைத்துள்ளதாகவும் சமீபத்தில் அறிவித்தனர்.
இந்த நிலையில், சிரஞ்சீவியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தசரா பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க உள்ள இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை நடிகர் நானி தயாரிக்கவுள்ளார். இது குறித்த போஸ்டரை நானி மற்றும் சிரஞ்சீவி பகிர்ந்துள்ளனர். 'தி பாரடைஸ்' படப்பிடிப்பு முடிந்ததும் இப்படம் துவங்க உள்ளது.