யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து முடித்து விட்டார் ராம்சரண். இந்த படம் வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் தனது அடுத்த படமாக தெலுங்கு இளம் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிக்க துவங்கி விட்டார் ராம்சரண். இந்த இயக்குனர் தான் விஜய் சேதுபதியை வைத்து தெலுங்கில் ‛உப்பென்னா' என்கிற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர். அந்த படத்தில் நடிகை கிர்த்தி ஷெட்டியையும் அறிமுகப்படுத்தியவர். இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். தேவரா படத்தை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடிக்கும் இரண்டாவது படம் இது.
கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் திவ்யேந்த் சர்மா என்பவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். பாலிவுட்டில் கடந்த 15 வருடங்களாக குறிப்பிடத்தக்க நடிகராக அறியப்படும் இவர், இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைகிறார். இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவ-22 முதல் துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.